செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 11 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-11-26 17:36 GMT   |   Update On 2020-11-26 17:36 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 464 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 76 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 18
செங்கல்பட்டு - 757
சென்னை - 4,020
கோவை - 679
கடலூர் - 80
தர்மபுரி - 137
திண்டுக்கல் - 90
ஈரோடு - 332
கள்ளக்குறிச்சி - 66
காஞ்சிபுரம் - 282
கன்னியாகுமரி - 113
கரூர் - 197
கிருஷ்ணகிரி - 200
மதுரை - 220
நாகை - 262
நாமக்கல் - 218
நீலகிரி - 159
பெரம்பலூர் - 2
புதுக்கோட்டை - 106
ராமநாதபுரம் - 43
ராணிப்பேட்டை - 75
சேலம் - 578
சிவகங்கை - 84
தென்காசி - 82
தஞ்சாவூர் - 138
தேனி - 31
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் - 541
திருவண்ணாமலை - 134
திருவாரூர் - 163
தூத்துக்குடி - 118
திருநெல்வேலி - 127
திருப்பூர் - 615
திருச்சி - 136
வேலூர் - 162
விழுப்புரம் - 122
விருதுநகர் - 66
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 3
உள்நாடு - 16
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 11,173
Tags:    

Similar News