செய்திகள்
மாயம்

திருச்சியில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2020-11-19 14:03 GMT   |   Update On 2020-11-19 14:03 GMT
திருச்சியில் லேப்- டாப் வாங்க வெளியே சென்ற கல்லூரி மாணவி வீடு திரும்பாதது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
மலைக்கோட்டை:

திருச்சி பெரியகடை வீதி அரபிக் குளத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46). இவரது மகள் கீர்த்தனா (19). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லேப்-டாப் வாங்கி வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கார்த்திகேயன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து மாயமான கீர்த்தனாவை தேடி வருகின்றார்.
Tags:    

Similar News