செய்திகள்
மதிமுக

ம.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது

Published On 2020-11-18 08:17 GMT   |   Update On 2020-11-18 08:17 GMT
ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 25-ந்தேதி காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.
சென்னை:

ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 25-ந் தேதி (புதன் கிழமை)காலை 10 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் அடுத்த மாதம் 5-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News