செய்திகள்
சட்ட சிக்கலின்றி அரசாணையை அமல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும்.
அரசாணையை முன்கூட்டியே பிறப்பிக்காதது தமிழக அரசின் நிர்வாகம் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும்.
அரசாணையை முன்கூட்டியே பிறப்பிக்காதது தமிழக அரசின் நிர்வாகம் மோசமடைந்துள்ளதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.