செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 26 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-10-28 19:34 GMT   |   Update On 2020-10-28 19:34 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 77
செங்கல்பட்டு - 1,184
சென்னை - 7,804
கோவை - 3,118
கடலூர் - 654
தர்மபுரி - 375
திண்டுக்கல் - 213
ஈரோடு - 801
கள்ளக்குறிச்சி - 244
காஞ்சிபுரம் - 398
கன்னியாகுமரி - 542
கரூர் - 241
கிருஷ்ணகிரி - 445
மதுரை - 564
நாகை - 341
நாமக்கல் - 646
நீலகிரி - 277
பெரம்பலூர் - 67
புதுக்கோட்டை - 225
ராமநாதபுரம் - 109
ராணிப்பேட்டை - 262
சேலம் - 1,737
சிவகங்கை - 131
தென்காசி - 104
தஞ்சாவூர் - 311
தேனி - 97
திருப்பத்தூர் - 278
திருவள்ளூர் - 1,116
திருவண்ணாமலை - 421
திருவாரூர் - 376
தூத்துக்குடி - 474
திருநெல்வேலி - 272
திருப்பூர் - 976
திருச்சி - 510
வேலூர் - 437
விழுப்புரம் - 338
விருதுநகர் - 189
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 2
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 26,356
Tags:    

Similar News