செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 688 பேர், கோவையில் 218 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக நேற்றைய விவரம்

Published On 2020-10-28 19:17 GMT   |   Update On 2020-10-28 19:17 GMT
தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 16 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 859 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
11 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 12
செங்கல்பட்டு - 150
சென்னை - 688
கோவை - 218
கடலூர் - 35
தர்மபுரி - 24
திண்டுக்கல் - 8
ஈரோடு - 155
கள்ளக்குறிச்சி - 20
காஞ்சிபுரம் - 86
கன்னியாகுமரி - 38
கரூர் - 21
கிருஷ்ணகிரி - 27
மதுரை - 51
நாகை - 41
நாமக்கல் - 52
நீலகிரி - 30
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 32
ராமநாதபுரம் - 10
ராணிப்பேட்டை - 28
சேலம் - 147
சிவகங்கை - 17
தென்காசி - 6
தஞ்சாவூர் - 51
தேனி - 18
திருப்பத்தூர் - 34
திருவள்ளூர் - 138
திருவண்ணாமலை - 21
திருவாரூர் - 34
தூத்துக்குடி - 31
திருநெல்வேலி - 21
திருப்பூர் - 96
திருச்சி - 48
வேலூர் - 72
விழுப்புரம் - 33
விருதுநகர் - 19
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 0
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 2,516
Tags:    

Similar News