செய்திகள்
மது பாட்டிலுக்கு மாலையிட்டு ஆயுத பூஜை வழிபாடு
ஆயுத பூஜையை முன்னிட்டு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
பெரியகுளம்:
ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொழிற்சாலைகளில் தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் வாழை மரம் கட்டி மாலை அணிவித்து வழிபட்டனர். மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
மேலும் இதனை படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். கடைக்கு வந்த குடிமகன்களும் இதனை பார்த்து வியப்படைந்தனர்.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கையில், அவரவர் வேலை செய்யும் இடத்தில் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். அதன்படியே நாங்களும் கொண்டாடுகிறோம் என்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொழிற்சாலைகளில் தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியர்கள் வாழை மரம் கட்டி மாலை அணிவித்து வழிபட்டனர். மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
மேலும் இதனை படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். கடைக்கு வந்த குடிமகன்களும் இதனை பார்த்து வியப்படைந்தனர்.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கையில், அவரவர் வேலை செய்யும் இடத்தில் ஆயுத பூஜை கொண்டாடுகின்றனர். அதன்படியே நாங்களும் கொண்டாடுகிறோம் என்றனர்.