செய்திகள்
கோப்பு படம்.

திருச்சியில் கணவரை தவிக்க விட்டு முன்னால் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்

Published On 2020-10-01 07:32 GMT   |   Update On 2020-10-01 07:32 GMT
திருச்சியில் 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு முன்னால் காதலனுடன் இளம்பெண் ஓடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:

திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 44). இவர் கோயம்புத்தூரில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

மகாலிங்கம் தன்னுடைய வேலை காரணமாக கோயம்புத்துரிலேயே தங்கி இருந்துள்ளார். ரம்யாவும், குழந்தைகளும் திருச்சியில் வசித்தனர். இந்த நிலையில் குழந்தைகளுடன், மனைவி மாயமாகி விட்டதாக அவரது உறவினர்கள் கோவையில் உள்ள மகாலிங்கத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து மகாலிங்கம் கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு வந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். அப்போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரனை நடத்தினர்.

விசாரணையில் ரம்யாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்னதாகவே வேறு ஒரு ஆணை காதலித்து வந்தது தெரியந்தது. இதையடுத்து ரம்யா தன் குழந்தைகளுடன் தன்னுடைய முன்னால் காதலனுடன் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.

மேலும் அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News