செய்திகள்
ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 4 பேர் பலி
ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
ராமநாதபுரம்:
சென்னை சோழவரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் சேமகவுதம் (வயது 19). இவர் ராமநாதபுரம் வந்திருந்தார்.
நேற்று இரவு சேமகவுதம் தனது நண்பர்களான தேவகோட்டையைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (20), வல்லரசு (19) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
கிழக்கு கடற்கரை சாலை நாகனேந்தல் விலக்கு அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் சேமகவுதம், அரிகிருஷ்ணன், வல்லரசு மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆர்.எஸ்.மங்கலம் கருங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (30), அத்தனூர் உதயகுமார் ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டித்துரை, வல்லரசு, அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உதயகுமார், சேமகவுதம் ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் உதயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஒரே விபத்தில் 4 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சென்னை சோழவரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் சேமகவுதம் (வயது 19). இவர் ராமநாதபுரம் வந்திருந்தார்.
நேற்று இரவு சேமகவுதம் தனது நண்பர்களான தேவகோட்டையைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (20), வல்லரசு (19) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
கிழக்கு கடற்கரை சாலை நாகனேந்தல் விலக்கு அருகே வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் சேமகவுதம், அரிகிருஷ்ணன், வல்லரசு மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆர்.எஸ்.மங்கலம் கருங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (30), அத்தனூர் உதயகுமார் ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தை பார்த்த அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். ஆனால் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டித்துரை, வல்லரசு, அரிகிருஷ்ணன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உதயகுமார், சேமகவுதம் ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் உதயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஒரே விபத்தில் 4 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.