செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 2 அடி சரிந்தது

Published On 2020-09-28 09:31 GMT   |   Update On 2020-09-28 09:31 GMT
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்ததால் கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.

நேற்று 7 ஆயிரத்து 679 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4 ஆயிரத்து 427 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 850 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது,

அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 26-ந் தேதி 100.02 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 99.12 அடியானது.

இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்து 97.99 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News