செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் மட்டும் 1,280 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-09-27 13:34 GMT   |   Update On 2020-09-27 13:34 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 786 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 1 நபருக்கும், சாலை மார்க்கமாக சொந்த ஊர் வந்தவர்களில் 4 நபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 706 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
9 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 37
செங்கல்பட்டு - 296
சென்னை - 1,280
கோவை - 596
கடலூர் - 256
தர்மபுரி - 93
திண்டுக்கல் - 39
ஈரோடு - 125
கள்ளக்குறிச்சி - 26
காஞ்சிபுரம் - 196
கன்னியாகுமரி - 92
கரூர் - 38
கிருஷ்ணகிரி - 66
மதுரை - 82
நாகை - 41
நாமக்கல் - 173
நீலகிரி - 161
பெரம்பலூர் - 14
புதுக்கோட்டை - 96
ராமநாதபுரம் - 11
ராணிப்பேட்டை - 75
சேலம் - 378
சிவகங்கை - 30
தென்காசி - 30
தஞ்சாவூர் - 190
தேனி - 76
திருப்பத்தூர் - 65
திருவள்ளூர் - 202
திருவண்ணாமலை - 72
திருவாரூர் - 123
தூத்துக்குடி - 42
திருநெல்வேலி - 111
திருப்பூர் - 282
திருச்சி - 83
வேலூர் - 119
விழுப்புரம் - 144
விருதுநகர் - 50
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 0
உள்நாடு - 1
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,791
Tags:    

Similar News