செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-09-23 18:41 GMT   |   Update On 2020-09-23 18:41 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 325 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 149
செங்கல்பட்டு - 2,394
சென்னை - 9,868
கோவை - 4,630
கடலூர் - 2,067
தர்மபுரி - 1,094
திண்டுக்கல் - 613
ஈரோடு - 1,113
கள்ளக்குறிச்சி - 705
காஞ்சிபுரம் - 1,191
கன்னியாகுமரி - 763
கரூர் - 502
கிருஷ்ணகிரி - 785 
மதுரை - 764
நாகை - 790
நாமக்கல் - 882
நீலகிரி - 719
பெரம்பலூர் - 111
புதுக்கோட்டை - 828
ராமநாதபுரம் - 205
ராணிப்பேட்டை - 607
சேலம் - 2,350
சிவகங்கை - 297
தென்காசி - 558
தஞ்சாவூர் - 1,260
தேனி - 513
திருப்பத்தூர் - 630
திருவள்ளூர் - 1,597
திருவண்ணாமலை - 1,045
திருவாரூர் - 874
தூத்துக்குடி - 750
திருநெல்வேலி - 925
திருப்பூர் - 1,667
திருச்சி - 817
வேலூர் - 940
விழுப்புரம் - 860
விருதுநகர் - 341
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 4
உள்நாடு - 44
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,249
Tags:    

Similar News