செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் சகோதரி மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published On 2020-09-16 06:09 GMT   |   Update On 2020-09-16 06:09 GMT
கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சரின் சகோதரி மரணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சரின் அன்பு சகோதரி வசந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

வசந்தாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வசந்தாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News