செய்திகள்
தார்சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்- கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2020-08-18 07:57 GMT   |   Update On 2020-08-18 07:57 GMT
கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஜாகீர்நாட்றாம்பள்ளி, பெத்ததாளப்பள்ளி பகுதியில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜாகீர்நாட்றாம்பள்ளி முதல் ராயக்கோட்டை மெயின் ரோடு வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.29 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோல் ஜாகீர்நாட்றாம்பள்ளி கிராமத்தில் 130 மீட்டர் தூரத்திற்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் 2018-19-ம் ஆண்டில் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் பசுமை வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பேபி என்பவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் பசுமை வீடு கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, உமாமகேஸ்வரி, பொறியாளர் செல்வம், பணி மேற்பார்வையாளர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News