செய்திகள்
சாத்தான்குளம் வழக்கு- கைதான காவலர் முத்துராஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்தார்
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ், கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்ததால் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரை:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காவலர்கள் பால்துரை, முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவலர் முத்துராஜ் பூரண குணமடைந்ததை தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காவலர்கள் பால்துரை, முத்துராஜ் மற்றும் முருகன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.எஸ்.ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காவலர் முத்துராஜ் பூரண குணமடைந்ததை தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.