செய்திகள்
சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்- தளவாய்சுந்தரம் பேட்டி
வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், “வருகிற சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்.
அவரை முன்னிறுத்தி தான் சட்டசபை தேர்தலை சந்திக்க முடியும். இதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. நிர்வாக திறமை, கொரோனா தடுப்பு பணி மற்றும் ஆய்வு பணிகளில் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்“ என்றார்.