செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் சுமார் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-08-12 17:18 GMT   |   Update On 2020-08-12 17:18 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 871 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 419
செங்கல்பட்டு - 3,024
சென்னை - 10,955
கோவை - 1,813
கடலூர் - 2,468
தர்மபுரி - 132
திண்டுக்கல் - 668
ஈரோடு - 419
கள்ளக்குறிச்சி - 749
காஞ்சிபுரம் - 2,758
கன்னியாகுமரி - 1,705
கரூர் - 312
கிருஷ்ணகிரி - 402 
மதுரை - 1,009
நாகை - 591
நாமக்கல் - 293
நீலகிரி - 134
பெரம்பலூர் - 221
புதுக்கோட்டை - 1,077
ராமநாதபுரம் - 430
ராணிப்பேட்டை - 1,624
சேலம் - 1,404
சிவகங்கை - 387
தென்காசி - 1,369
தஞ்சாவூர் - 1,182
தேனி - 2,998
திருப்பத்தூர் - 592
திருவள்ளூர் - 3,710
திருவண்ணாமலை - 1,924
திருவாரூர் - 374
தூத்துக்குடி - 1,619
திருநெல்வேலி - 1,577
திருப்பூர் - 435
திருச்சி - 856
வேலூர் - 1,178
விழுப்புரம் - 556
விருதுநகர் - 1,432
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 52
உள்நாடு - 104
ரெயில் நிலைய கண்காணிப்பு - 4

மொத்தம் - 52,929
Tags:    

Similar News