செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 52 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-08-11 16:49 GMT   |   Update On 2020-08-11 16:49 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 834 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. 

ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.   

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 355
செங்கல்பட்டு - 3,011
சென்னை - 11,130
கோவை - 1,738
கடலூர் - 2,226
தர்மபுரி - 139
திண்டுக்கல் - 765
ஈரோடு - 389
கள்ளக்குறிச்சி - 827
காஞ்சிபுரம் - 2,699
கன்னியாகுமரி - 1,767
கரூர் - 326
கிருஷ்ணகிரி - 452 
மதுரை - 870
நாகை - 571
நாமக்கல் - 294
நீலகிரி - 115
பெரம்பலூர் - 239
புதுக்கோட்டை - 1,009
ராமநாதபுரம் - 412
ராணிப்பேட்டை - 1,527
சேலம் - 1,254
சிவகங்கை - 369
தென்காசி - 1,302
தஞ்சாவூர் - 1,317
தேனி - 3,002
திருப்பத்தூர் - 558
திருவள்ளூர் - 3,624
திருவண்ணாமலை - 1,963
திருவாரூர் - 360
தூத்துக்குடி - 1,671
திருநெல்வேலி - 1,815
திருப்பூர் - 377
திருச்சி - 889
வேலூர் - 1,295
விழுப்புரம் - 524
விருதுநகர் - 1,403
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 84
உள்நாடு - 138
ரெயில் நிலைய கண்காணிப்பு - 4

மொத்தம் - 52,810
Tags:    

Similar News