செய்திகள்
இ-பாஸ்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை

Published On 2020-08-11 14:23 GMT   |   Update On 2020-08-11 14:23 GMT
இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று சிறு, குறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:

கோவையை சேர்ந்த சிறு, குறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தொழில் விஷயமாக வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால் இ-பாஸ் முறையாக வழங்கப்படுவது இல்லை. ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் வெளிமாவட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வருவது தடைபட்டுள்ளது. எனவே வேலை மற்றும் தொழில் காரணமாக பிற மாவட்டங்களுக்கு சென்று வர இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News