செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தேனியில் இன்று மேலும் 293 பேருக்கு கொரோனா

Published On 2020-08-11 04:17 GMT   |   Update On 2020-08-11 04:17 GMT
தேனியில் இன்று மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,550 ஆக அதிகரித்துள்ளது.
தேனி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தேனியில் இன்று மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  8,550 ஆக அதிகரித்துள்ளது.


Tags:    

Similar News