செய்திகள்
2 நாட்களில் வைகை அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி:
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு ஆயிரத்து ஒரு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 5 அடியாக உயர்ந்து தற்போது 35 புள்ளி 4 ஆக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு ஆயிரத்து ஒரு கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களில் 5 அடியாக உயர்ந்து தற்போது 35 புள்ளி 4 ஆக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.