செய்திகள்
பெட்டியோடு பால் பாக்கெட் திருட்டு- கைவரிசை இளைஞர்களை தேடும் போலீஸ்
சென்னை பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் பால் பாக்கெட்டுகளை திருடும் கும்பலை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் பால் பாக்கெட்டுகளை திருடும் கும்பலை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலையில் வரும் பால் வினியோக வாகனங்கள், கடைகளின் முன்பு, பெட்டியோடு இறக்கிவிட்டு செல்கின்றன.
ஆனால், அங்கு பால் இருப்பதில்லை. இதனால், ஆச்சர்யமடைந்த கடை உரிமையாளர், போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வரும் 4 இளைஞர்கள், பால்பாக்கெட்டை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிக்கரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் பால் பாக்கெட்டுகளை திருடும் கும்பலை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலையில் வரும் பால் வினியோக வாகனங்கள், கடைகளின் முன்பு, பெட்டியோடு இறக்கிவிட்டு செல்கின்றன.
ஆனால், அங்கு பால் இருப்பதில்லை. இதனால், ஆச்சர்யமடைந்த கடை உரிமையாளர், போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வரும் 4 இளைஞர்கள், பால்பாக்கெட்டை திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.