செய்திகள்
கடையடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு- விக்கிரமராஜா
தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக அரசு உறுதியளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி வர இருப்பதாலும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:
தமிழகத்தில் வரும் 10ந்தேதி நடக்க இருந்த மார்க்கெட் மூடல், கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக அரசு உறுதியளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணஜெயந்தி வர இருப்பதாலும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.