செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 53 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 684 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 272 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 218
செங்கல்பட்டு - 2,644
சென்னை - 11,720
கோவை - 1,579
கடலூர் - 1,912
தர்மபுரி - 86
திண்டுக்கல் - 561
ஈரோடு - 239
கள்ளக்குறிச்சி - 827
காஞ்சிபுரம் - 2,872
கன்னியாகுமரி - 1,933
கரூர் - 319
கிருஷ்ணகிரி - 449
மதுரை - 1,864
நாகை - 390
நாமக்கல் - 363
நீலகிரி - 160
பெரம்பலூர் - 142
புதுக்கோட்டை - 821
ராமநாதபுரம் - 389
ராணிப்பேட்டை - 1,731
சேலம் - 1,109
சிவகங்கை - 460
தென்காசி - 870
தஞ்சாவூர் - 881
தேனி - 2,686
திருப்பத்தூர் - 489
திருவள்ளூர் - 3,469
திருவண்ணாமலை - 1,995
திருவாரூர் - 181
தூத்துக்குடி - 1,832
திருநெல்வேலி - 2,274
திருப்பூர் - 329
திருச்சி - 1,273
வேலூர் - 1,376
விழுப்புரம் - 803
விருதுநகர் - 1,911
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 156
உள்நாடு - 171
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 53,486