செய்திகள்
போராட்டம்

கடலூரில் 2வது நாளாக தொடரும் வருவாய்துறை ஊழியர்கள் போராட்டம்

Published On 2020-08-06 12:11 GMT   |   Update On 2020-08-06 12:11 GMT
கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வருவாய்துறை ஊழியர்களின் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வருவாய்துறை ஊழியர்களின் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு  போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது.

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு அறிவித்த இழப்பீடு தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும், அனைவருக்கும் உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
Tags:    

Similar News