செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கடலோர பாதுகாப்புப் படைவீரர் இருவருக்கு கொரோனா

Published On 2020-08-06 09:55 GMT   |   Update On 2020-08-06 09:55 GMT
தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புப் படை கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்புப் படை கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று ஏற்பட்ட 2 வீரர்களும் கடலோர பாதுகாப்புப்படை குடியிருப்பில் உள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Tags:    

Similar News