செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

மதுரையில் கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2020-08-06 09:48 GMT   |   Update On 2020-08-06 09:48 GMT
மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் ரூ.304 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.21.57 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொழில்நுட்ப பூங்காவில் 900 படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா சிகிச்சை நல மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News