செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவள்ளூரில் இன்று மேலும் 655 பேருக்கு கொரோனா

Published On 2020-08-05 09:08 GMT   |   Update On 2020-08-05 09:08 GMT
திருவள்ளூரில் இன்று மேலும் 655 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 15,751 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூரில் இன்று மேலும் 655 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 15,751 ஆக அதிகரித்துள்ளது.


Tags:    

Similar News