செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 55 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-08-04 22:04 GMT   |   Update On 2020-08-04 22:04 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 55 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 55 ஆயிரத்து 152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 217
செங்கல்பட்டு - 2,583
சென்னை - 11,856
கோவை - 1,685
கடலூர் - 1,720
தர்மபுரி - 101
திண்டுக்கல் - 493
ஈரோடு - 172
கள்ளக்குறிச்சி - 1,017
காஞ்சிபுரம் - 2,859
கன்னியாகுமரி - 2,002
கரூர் - 264
கிருஷ்ணகிரி - 520 
மதுரை - 2,242
நாகை - 404
நாமக்கல் - 346
நீலகிரி - 139
பெரம்பலூர் - 181
புதுக்கோட்டை - 791
ராமநாதபுரம் - 480
ராணிப்பேட்டை - 1,796
சேலம் - 1,137
சிவகங்கை - 496
தென்காசி - 785
தஞ்சாவூர் - 864
தேனி - 2,691
திருப்பத்தூர் - 498
திருவள்ளூர் - 3,437
திருவண்ணாமலை - 2,267
திருவாரூர் - 323
தூத்துக்குடி - 1,977
திருநெல்வேலி - 2,298
திருப்பூர் - 331
திருச்சி - 1,435
வேலூர் - 1,234
விழுப்புரம் - 816
விருதுநகர் - 2,377
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 153
உள்நாடு - 163
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 55,152
Tags:    

Similar News