செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் உயிரிழப்பு

Published On 2020-08-03 12:00 GMT   |   Update On 2020-08-03 12:00 GMT
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 23 பேரும், குஜராத்தில் 20 பேரும், பீகாரில் 15 பேரும், டெல்லி, கர்நாடகாவில் தலா 12 பேரும், ஆந்திரா மற்றும் உ.பி.யில் தலா 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News