செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,563 கனஅடியில் இருந்து 6,864 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,563 கனஅடியில் இருந்து 6,864 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாகவும், நீர் இருப்பு 28.26 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,563 கனஅடியில் இருந்து 6,864 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாகவும், நீர் இருப்பு 28.26 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.