செய்திகள்
டாஸ்மாக் கடை

தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு

Published On 2020-07-21 07:37 GMT   |   Update On 2020-07-21 07:37 GMT
தஞ்சையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை:

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

வரும் 31ந்தேதி வரை டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரைதான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News