செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரியில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-16 11:25 GMT   |   Update On 2020-07-16 11:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News