செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 வயது குழந்தை உள்பட 32 பேருக்கு கொரோனா

Published On 2020-07-16 09:37 GMT   |   Update On 2020-07-16 09:38 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வயது குழந்தை உள்பட 32 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்தது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.சி.பள்ளி அருகே உள்ள கண்ணப்பள்ளியில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்த 29 வயது வாலிபர், ஓமனில் இருந்து காவேரிப்பட்டணம் வந்த 29 வயது ஆண், பெங்களூருவில் இருந்து ஓசூர் வந்த 59 வயது பெண், கேரள மாநிலம் கொச்சினில் இருந்து வந்த கம்மனப்பள்ளியை சேர்ந்த 54 வயது ஆண் ஆகியோருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல் ஜெகதேவியை சேர்ந்த 32 வயது ஆண், 54 வயது பெண், பர்கூர் அத்திகானூரைச் சேர்ந்த 48 வயது ஆண், பர்கூரை சேர்ந்த 12 வயது சிறுவன், 70 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓசூர் கங்கம்மா கோவில் பகுதியைச் சேர்ந்த பெங்களூருவில் இருந்து வந்த 37 வயது ஆண், கல்லாவியை சேர்ந்த 53 வயது பெண், சூளகிரி சாமல்பள்ளத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியம் பகுதி 2-ஐ சேர்ந்த 77 வயது முதியவர், ஓசூர் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த 48 வயது ஆண், 40 வயது பெண், கிருஷ்ணகிரி சேலம் பை-பாஸ் சாலையை சேர்ந்த 31 வயது ஆண், ஓசூரை நாராயணன் சூப்பர் மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்த 34 வயது பெண், 39 வயது ஆண், ஓசூர் சின்ன எலசகிரியைச் சேர்ந்த 48 வயது ஆண், ஓசூரை சேர்ந்த 48 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியைச் சேர்ந்த 27 வயது வாலிபர், கிருஷ்ணகிரி சேலம் சாலை அவ்வை நகரைச் சேர்ந்த 46 வயது ஆண், சூளகிரி மேலுமலையைச் சேர்ந்த 50 வயது ஆண், கிருஷ்ணகிரி சேலம் சாலையைச் சேர்ந்த 67 வயது முதியவர், கிருஷ்ணகிரி சென்னை பை-பாஸ் சாலையைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

வெள்ளகுட்டையை சேர்ந்த 60 வயது பெண், பெத்தனப்பள்ளியைச் சேர்ந்த 33 வயது ஆண், சின்னமேல்பள்ளியைச் சேர்ந்த 60 வயது ஆண், ஊத்தங்கரை சேர்ந்த 24 வயது பெண், கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 45 வயது ஆண், 32 வயது ஆண், தொன்னையன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண் என ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 6 பேர் ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், 26 பேர் கிருஷ்ணகிரி தலைமை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News