செய்திகள்
கொரோனா வைரஸ்

தேனியில் இன்று 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-15 04:16 GMT   |   Update On 2020-07-15 04:16 GMT
தேனியில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.
தேனி:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் ஏற்கனவே 1,916 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 684 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News