செய்திகள்
சென்னை 1078 பேர்,மதுரையில் 450 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்
தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 526 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 467 பேர்.
விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 19 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 6 பேர் ஆவர்.
மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 34 பேர் ஆகும்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 97 ஆயிரத்து 310 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,099 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 29
செங்கல்பட்டு - 264
சென்னை - 1,078
கோவை - 188
கடலூர் - 14
தர்மபுரி - 7
திண்டுக்கல் - 157
ஈரோடு - 28
கள்ளக்குறிச்சி - 57
காஞ்சிபுரம் - 117
கன்னியாகுமரி - 122
கரூர் - 5
கிருஷ்ணகிரி - 10
மதுரை - 450
நாகை - 15
நாமக்கல் - 14
நீலகிரி - 38
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 56
ராமநாதபுரம் - 64
ராணிப்பேட்டை - 15
சேலம் - 58
சிவகங்கை - 113
தென்காசி - 103
தஞ்சாவூர் - 29
தேனி - 53
திருப்பத்தூர் - 32
திருவள்ளூர் - 360
திருவண்ணாமலை - 62
திருவாரூர் - 19
தூத்துக்குடி - 112
திருநெல்வேலி - 59
திருப்பூர் - 12
திருச்சி - 117
வேலூர் - 194
விழுப்புரம் - 121
விருதுநகர் - 328
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 19
உள்நாடு - 6
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0
மொத்தம் - 4,526