செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் இன்று 81 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-12 06:48 GMT   |   Update On 2020-07-12 06:48 GMT
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,418 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,49,533 ஆக உயர்ந்துள்ளது.    

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,46,600 பேரும், தமிழகத்தில் 1,34,226 பேரும், டெல்லியில் 1,10,921 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,418ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 739 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
Tags:    

Similar News