செய்திகள்
சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 85 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 49
செங்கல்பட்டு - 3,360
சென்னை - 17,989
கோவை - 812
கடலூர் - 437
தர்மபுரி - 152
திண்டுக்கல் - 232
ஈரோடு - 188
கள்ளக்குறிச்சி - 760
காஞ்சிபுரம் - 1,879
கன்னியாகுமரி - 741
கரூர் - 52
கிருஷ்ணகிரி - 80
மதுரை - 3,843
நாகை - 177
நாமக்கல் - 67
நீலகிரி - 109
பெரம்பலூர் - 12
புதுக்கோட்டை - 184
ராமநாதபுரம் - 1,026
ராணிப்பேட்டை - 757
சேலம் - 1,057
சிவகங்கை - 303
தென்காசி - 365
தஞ்சாவூர் - 238
தேனி - 1,066
திருப்பத்தூர் - 182
திருவள்ளூர் - 2,425
திருவண்ணாமலை - 1,240
திருவாரூர் - 286
தூத்துக்குடி - 1,096
திருநெல்வேலி - 815
திருப்பூர் - 125
திருச்சி - 589
வேலூர் - 1,582
விழுப்புரம் - 515
விருதுநகர் - 994
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 300
உள்நாடு - 230
ரெயில் நிலைய கண்காணிப்பு - 96
மொத்தம் - 46,410