செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் மட்டும் 1,205 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்டவாரியாக இன்றைய விவரம்

Published On 2020-07-10 14:09 GMT   |   Update On 2020-07-10 14:09 GMT
தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 680 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 3 ஆயிரத்து 636 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 19 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 4 பேர் ஆவர்.

மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 21 பேர் ஆகும்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 82 ஆயிரத்து 324 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,829 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை (வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உள்பட):-

அரியலூர் - 5
செங்கல்பட்டு - 242
சென்னை - 1,205
கோவை - 43
கடலூர் - 13
தர்மபுரி - 15
திண்டுக்கல் - 8
ஈரோடு - 15
கள்ளக்குறிச்சி - 82
காஞ்சிபுரம் - 61
கன்னியாகுமரி - 105
கரூர் - 5
கிருஷ்ணகிரி - 2
மதுரை - 192
நாகை - 7
நாமக்கல் - 2
நீலகிரி - 10
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 36
ராமநாதபுரம் - 85
ராணிப்பேட்டை - 13
சேலம் - 127
சிவகங்கை - 42
தென்காசி - 9
தஞ்சாவூர் - 47
தேனி - 108
திருப்பத்தூர் - 31
திருவள்ளூர் - 219
திருவண்ணாமலை - 103
திருவாரூர் - 27
தூத்துக்குடி - 195
திருநெல்வேலி - 145
திருப்பூர் - 24
திருச்சி - 109
வேலூர் - 140
விழுப்புரம் - 41
விருதுநகர் - 143
விமானநிலைய தனிமைப்படுத்தல்
வெளிநாடு - 19
உள்நாடு - 4
ரெயில்நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 3,680

Tags:    

Similar News