செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை

Published On 2020-07-09 14:36 GMT   |   Update On 2020-07-09 14:46 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் 20 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மதுரையில் 4 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 78 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 34
செங்கல்பட்டு - 3,041
சென்னை - 20,271
கோவை - 702
கடலூர் - 486
தர்மபுரி - 137
திண்டுக்கல் - 300
ஈரோடு - 211
கள்ளக்குறிச்சி - 747
காஞ்சிபுரம் - 1,782
கன்னியாகுமரி - 592
கரூர் - 50
கிருஷ்ணகிரி - 88 
மதுரை - 4,001
நாகை - 181
நாமக்கல் - 55
நீலகிரி - 120
பெரம்பலூர் - 11
புதுக்கோட்டை - 281
ராமநாதபுரம் - 954
ராணிப்பேட்டை - 733
சேலம் - 882
சிவகங்கை - 257
தென்காசி - 289
தஞ்சாவூர் - 187
தேனி - 897
திருப்பத்தூர் - 183
திருவள்ளூர் - 2,169
திருவண்ணாமலை - 1,131
திருவாரூர் - 268
தூத்துக்குடி - 795
திருநெல்வேலி - 665
திருப்பூர் - 109
திருச்சி - 495
வேலூர் - 1,441
விழுப்புரம் - 571
விருதுநகர் - 941
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 266
உள்நாடு - 231
ரெயில் நிலைய கண்காணிப்பு - 98

மொத்தம் - 46,652
Tags:    

Similar News