செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் 1 லட்சத்து 18 ஆயிரத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-07-07 19:42 GMT   |   Update On 2020-07-07 19:42 GMT
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் 
இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் - 475
செங்கல்பட்டு - 6,942
சென்னை - 71,230
கோவை - 839
கடலூர் - 1,342
தர்மபுரி - 124
திண்டுக்கல் - 730
ஈரோடு - 286
கள்ளக்குறிச்சி - 1,274
காஞ்சிபுரம் - 2,836
கன்னியாகுமரி - 757
கரூர் - 174
கிருஷ்ணகிரி - 203 
மதுரை - 4,674
நாகை - 314
நாமக்கல் - 118
நீலகிரி - 150
பெரம்பலூர் - 170
புதுக்கோட்டை - 418
ராமநாதபுரம் - 1,479
ராணிப்பேட்டை - 1,312
சேலம் - 1,340
சிவகங்கை - 576
தென்காசி - 530
தஞ்சாவூர் - 533
தேனி - 1,222
திருப்பத்தூர் - 322
திருவள்ளூர் - 5.205
திருவண்ணாமலை - 2,633
திருவாரூர் - 576
தூத்துக்குடி - 1,416
திருநெல்வேலி - 1,295
திருப்பூர் - 237
திருச்சி - 1,059
வேலூர் - 2,097
விழுப்புரம் - 1,233
விருதுநகர் - 1,228
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 448
உள்நாட்டு - 376
ரெயில் நிலைய கண்காணிப்பு - 421

மொத்தம் - 1,18,594

Tags:    

Similar News