செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Published On 2020-07-05 14:36 GMT   |   Update On 2020-07-05 14:36 GMT
சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   

சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.  

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 66,519லிருந்து 68,254 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  வேறு நோய் பாதிப்பு இல்லாத 3 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News