செய்திகள்
கோப்பு படம்

58 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

Published On 2020-07-03 18:44 GMT   |   Update On 2020-07-03 18:44 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2 ஆயிரத்து 357 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 425
செங்கல்பட்டு - 3,113
சென்னை - 40,111
கோவை - 252
கடலூர் - 813
தர்மபுரி - 41
திண்டுக்கல் - 310
ஈரோடு - 80
கள்ளக்குறிச்சி - 443
காஞ்சிபுரம் - 925
கன்னியாகுமரி - 180
கரூர் - 124
கிருஷ்ணகிரி - 52 
மதுரை - 967
நாகை - 106
நாமக்கல் - 90
நீலகிரி - 41
பெரம்பலூர் - 156
புதுக்கோட்டை - 79
ராமநாதபுரம் - 318
ராணிப்பேட்டை - 535
சேலம் - 311
சிவகங்கை - 118
தென்காசி - 207
தஞ்சாவூர் - 293
தேனி - 234
திருப்பத்தூர் - 80
திருவள்ளூர் - 2,793
திருவண்ணாமலை - 1,050
திருவாரூர் - 283
தூத்துக்குடி - 758
திருநெல்வேலி - 619
திருப்பூர் - 124
திருச்சி - 456
வேலூர் - 443
விழுப்புரம் - 601
விருதுநகர் - 296
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 203
உள்நாடு - 114
ரெயில் நிலைய கண்காணிப்பு - 234

மொத்தம் - 58,378


Tags:    

Similar News