செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சுமார் 43 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

Published On 2020-07-03 18:20 GMT   |   Update On 2020-07-03 18:20 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 42 ஆயிரத்து 944 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் உள்பட):-

அரியலூர் - 38
செங்கல்பட்டு - 2,919
சென்னை - 23,581
கோவை - 391
கடலூர் - 325
தர்மபுரி - 66
திண்டுக்கல் - 301
ஈரோடு - 121
கள்ளக்குறிச்சி - 656
காஞ்சிபுரம் - 1,321
கன்னியாகுமரி - 308
கரூர் - 27
கிருஷ்ணகிரி - 116 
மதுரை - 2,405
நாகை - 167
நாமக்கல் - 10
நீலகிரி - 78
பெரம்பலூர் - 8
புதுக்கோட்டை - 169
ராமநாதபுரம் - 808
ராணிப்பேட்டை - 440
சேலம் - 812
சிவகங்கை - 254
தென்காசி - 183
தஞ்சாவூர் - 183
தேனி - 688
திருப்பத்தூர் - 136
திருவள்ளூர் - 1,468
திருவண்ணாமலை - 1,119
திருவாரூர் - 230
தூத்துக்குடி - 293
திருநெல்வேலி - 294
திருப்பூர் - 73
திருச்சி - 343
வேலூர் - 1,220
விழுப்புரம் - 402
விருதுநகர் - 376
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 206
உள்நாடு - 241
ரெயில் நிலைய கண்காணிப்பு - 179

மொத்தம் - 42,955

Tags:    

Similar News