செய்திகள்
கோப்புப்படம்

திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2020-07-02 04:21 GMT   |   Update On 2020-07-02 04:21 GMT
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 215 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து திண்டுக்கல்லில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News