செய்திகள்
முக்கொம்பு கதவணை பணிகள் ஜனவரிக்குள் நிறைவடையும்- எடப்பாடி பழனிசாமி
திருச்சி முக்கொம்பு புதிய கதவணை கட்டும் பணிகள் ஜனவரி மாதத்திற்குள் நிறைவடையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி:
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த முக்கொம்பு பழைய கதவணை 2018 ஆகஸ்ட் மாதம் வெள்ளப்பெருக்கால் உடைந்தது. இதனையடுத்து ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில புதிய கதவணை கட்டப்படுகிறது. கதவணை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முக்கொம்பு கதவணை கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். அப்போது, கதவணை கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கதவணை கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், 2021 ஜனவரிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த முக்கொம்பு பழைய கதவணை 2018 ஆகஸ்ட் மாதம் வெள்ளப்பெருக்கால் உடைந்தது. இதனையடுத்து ரூ. 387 கோடி மதிப்பில் முக்கொம்பில புதிய கதவணை கட்டப்படுகிறது. கதவணை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முக்கொம்பு கதவணை கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். அப்போது, கதவணை கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கதவணை கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், 2021 ஜனவரிக்குள் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.