செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-15 05:09 GMT   |   Update On 2020-06-15 05:09 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 698 ஆக உள்ளது.
திருவண்ணாமலை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 24,547 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 671 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்துள்ளது.

செய்யாறு பகுதியில் 19 பேருக்கும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும் என 27 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News