செய்திகள்
திருவண்ணாமலையில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 698 ஆக உள்ளது.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 24,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே 671 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 698 ஆக உயர்ந்துள்ளது.
செய்யாறு பகுதியில் 19 பேருக்கும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும் என 27 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 24,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 435-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.
செய்யாறு பகுதியில் 19 பேருக்கும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும் என 27 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.