செய்திகள்
ராணுவவீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை- எடப்பாடி பழனிசாமி உத்தரவு
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெ.மதியழகன். இவர் இந்திய ராணுவம் 17-வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணிபுரிந்தார். ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் போர் தாக்குதலால் கடந்த 4-ந் தேதி வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம் அடைந்த பெ.மதியழகனின் மனைவி தமிழரசி, மகன் ம.ரோகித், மகள் ம.சுபஸ்ரீ, அவரது தந்தை பெத்தாகவுண்டர், தாயார் ராமாயி ஆகியோர் எடப்பாடி பயணியர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர். பெ.மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டி கோரிக்கை மனுவை அளித்தார்கள். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், பாதுகாப்பு பணியில் வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், தேசத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த பெ.மதியழகனின் மனைவி தமிழரசிக்கு, அரசுப் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெ.மதியழகன். இவர் இந்திய ராணுவம் 17-வது மெட்ராஸ் படைப்பிரிவில் அவில்தாராக பணிபுரிந்தார். ஜம்மு யூனியன் பிரதேசம், அக்னூர் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிரியின் போர் தாக்குதலால் கடந்த 4-ந் தேதி வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம் அடைந்த பெ.மதியழகனின் மனைவி தமிழரசி, மகன் ம.ரோகித், மகள் ம.சுபஸ்ரீ, அவரது தந்தை பெத்தாகவுண்டர், தாயார் ராமாயி ஆகியோர் எடப்பாடி பயணியர் மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர். பெ.மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டி கோரிக்கை மனுவை அளித்தார்கள். அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், பாதுகாப்பு பணியில் வீரமரணம் அடைந்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், தேசத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த பெ.மதியழகனின் மனைவி தமிழரசிக்கு, அரசுப் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.