செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா

Published On 2020-06-06 10:17 GMT   |   Update On 2020-06-06 10:17 GMT
சென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குற்றவாளியை வடபழனி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளியைப் பிடித்த வடபழனி போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 6 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News