செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூரில் இன்று 59 பேருக்கு கொரோனா

Published On 2020-06-06 09:11 GMT   |   Update On 2020-06-06 09:11 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உள்ளது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. 10,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 178-ஆக உள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,191 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 19 பேரும், வில்லிவாக்கத்தில் 11 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News